பொதுத்தேர்தல் வெற்றியுடன் எனது கொள்கைகளைத் தொடருவேன்- முன்னாள் ஜனாதிபதி

unnamed 1
unnamed 1

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அபார வெற்றியுடன் தனது கொள்கைகளைத் தொடருவேன் என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஆற்றில் கல்லெறிந்து மேலே வரும் மீனை, நீர்பறவை பிடித்து உட்கொள்ள முயற்சிக்கும்போது உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் கழுகு வந்து அதனை பறித்துக்கொண்டு சென்றுவிடும்.

அவ்வாறான கழுகுபோன்றுதான் நாமும் பலமாக இருப்போம். மேலும் நாம் எந்ததொரு தேர்தலிலும் தோல்வியடைய மாட்டோம்.

அந்தவகையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில்  அபார வெற்றியடைந்து  எனது கொள்கைகளை தொடருவேன்.

இதேவேளை பொலன்னறுவை மாவட்டத்தின் நிலைமை முன்பை விட தற்போது மோசமான நிலையில் உள்ளது.

எனவே பொலன்னறுவை மாவட்டத்தினை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.