கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சட்டவிரோதமான வகையில் காணப்பட்ட 5
பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவு அதிகாரிகளால் விமான நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேக நபர்களில் நால்வர் சட்டவிரோத தரகு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் ஐவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.