சிலாபம் குமராகட்டுவ பிரதேச வீடு ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தனது தாய் தொடர்பில் தகவல் தெரியவில்லை என தெரிவித்து மகன் நேற்று இரவு தேடிப்பார்த்த போது தாய் அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்ணை கொலை செய்த நபர் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.