கூட்டமைப்பின் யாழ்தேர்தல் களத்தில் ரவிராஜின் மனைவி சசிகலா?

ravi
ravi

.

எதிர்வரும் நாடாளமன்றத் தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் முன்னால் நாடாளமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா போட்டியிடவுள்ளார்.

ஆசிரியரான இவர் முன்னாயத்தமாக தனது ஆசிரியர் சேவையில் இருந்து இன்று (02/03/2020) முதல் ஓய்வுபெறுகிறார். இதன் மூலம் அவர் வேட்பாளராக களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது

. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்றது. அதன் பின்னர் 14 பேர் கொண்ட வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், பெண்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியான சசிகலாவை களமிறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் தலைமைத்துவ வெற்றிடத்தை கருத்தில் கொண்டு அவர் களமிறங்குகின்றார்.