சிவனொளிபாதமலைக்கு அண்மித்த வனப்பகுதிக்கு தீ வைப்பு!

IMG 20200303 WA0049
IMG 20200303 WA0049

மஸ்கெலியா மவுசாக்கலை  நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பிரதான நீர் வீழ்ச்சிகளான  காட்மோர் நீர்வீழ்ச்சி, மறே  நீர் வீழ்ச்சிகளுக்கிடையில் உள்ள வனப் பகுதியில் இன்று காலை இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. என நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,  குறித்த தீ பரவல் காரணமாக 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து உள்ளதாகவும்  இவ்வாறு வனப்பகுதிக்கு தீ வைத்தமை அங்குள்ள வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக என்ற சந்தேகமும் ஏற்படுகிறது என்றும்  இதனால்  நீர் ஊற்றுகள் வற்றும் அபாயம் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.