லண்டன் செல்வதற்காக சென்ற இரு இலங்கையர்கள் கைது!

arrest 1
arrest 1

பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு செல்வதற்கு சென்ற இலங்கையர்கள் இருவர் நைஜீரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி கடவுச்சீட்டு இரண்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் அபுதாபியில் அமைந்துள்ள நெம்ட் அசிகியூ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் போலி கடவுச்சீட்டுகள் இரண்டினை பயன்படுத்தி லண்டன் ஹுத்ரோ விமான நிலையத்திற்கு செல்ல தயாராக போது நைஜீரிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தினுள் நைஜீரியாவில் போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பமாக இது குறிப்பிடப்படுகின்றது.

சட்டவிரோத கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்காக இந்த சந்தேக நபர்களுக்கு நைஜீரிய நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் உதவி செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.