ஐக்கிய ராஜ்ஜிய அரசின் நிதி உதவியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில் கடலுணவு உணவகத்துக்கான அடிக்கல் இன்றையதினம்(03) நாட்டி வைக்கப்பட்டுள்ளது .
5 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியின் ஆரம்பத்தில் இந்த கடலுணவு உணவகம் அமையப்பெறவுள்ளது.
ஐக்கிய ராஜ்ஜிய அரசின் நிதி உதவியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தால் பெண்கள் வாழ்வாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ஐக்கிய ராஜ்ஜிய உயர்ஸ்தானிகராலயதின் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் , ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான நிகழ்ச்சி திட்ட பணிப்பளார் , உதவி திட்டமிடல் பணிப்பளார் மாவட்ட செயலகம் பயனாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.