மாமிக்கு பாலில் விசம் கலந்து கொடுத்த சிறுவன்!

download 4
download 4

14 வயது சிறுவன் ஒருவன் தனது மாமியை கொலை செய்வதற்காக பால் மற்றும் குடிநீரில் விசம் கலந்து கொடுத்த சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.

மாமி கொடுத்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸாரால் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நாத்தன்டிய, பஹல தப்போவ, பாணதுர தோட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு பெற்றோர் இல்லாதததால் அவர் தனது மாமியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி சிறுவனின் மாமிக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலை தகவல்கள் மூலம் சிறுவனின் மாமியின் உடலில் விசம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து மாமியின் சித்திரவதைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பால் மற்றும் குடிநீரில் விசம் கலந்துள்ளான் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாரவில பொலிஸார் சிறுவனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.