பண மோசடியில் ஈடுப்பட்ட ஒருவர் கைது!

5 ed
5 ed

பெண்களுக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கால காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு நீதிமன்ற பிடியாணைகள் காணப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக தெரிவித்து 8 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.