பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்- பல தீர்மானங்கள் நிறைவேற்றம்

v1
v1

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று (23.09.2019) பிற்பகல் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • கல்குடாவில் அமைக்கப்பட்டு வரும் எதனோல் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துவதுடன் அதற்கான அனுமதியினை இரத்துச் செய்வது
  • பாசிக்குடாவில் இயங்கிவரும் அனுமதி பெறப்படாதா மசாஜ் நிலையங்களுக்கு(SPA) தடை விதிப்பது
  • பிரதேசத்தில் உள்ள காணிகளை குத்தகை அடிப்படையில் இப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தல்
  • கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குரிய எல்லையை அடையாளப்படுத்தல்
  • மற்றும் அன்றைய கூட்டத்திற்கு சமூகமளிக்காத திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்

என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.