யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 வீதியின் திரப்பனை பகுதியில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி சுவரொன்றின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.