எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள் பரப்பப்படுவதாக நளினி குற்றச்சாட்டு

fault
fault

‘பெண்’ என்ற காரணத்தினாலேயே தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள் பரப்பப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளருமான திருமதி நளினி ரட்னராஜா தெரிவித்துள்ளார்.

இதனாலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் சென்று பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவரும் நிலையில், நானும் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே ஏனைய பெண்களையும் ஈடுபடுத்தமுடியும் என்ற அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.

ஆனால் என்மீது முகம் தெரியாத, அடையாளம் தெரியாத வலைத்தளங்களில் இருந்து ஒரு பெண் என்ற காரணத்தினால் நடத்தை தொடர்பான அவதூறும் அரசியல் ரீதியான அவதூறுகளும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படுகின்றன என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.