ரிட்மனு தாக்கல் செய்த ரவி கருணாநாயக்க

6oad
6oad

தனக்கு எதிரான பிடியாணையினை செல்லுபடி அற்றதாக்குமாறு கோரி முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 10 சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.

எனினும் கடந்த மூன்று நாட்களாக அவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.