இலங்கையிலும் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம்!

1 ad 2
1 ad 2

இலங்கையிலும் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகளினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றவில்லை என்றால் கொரோனா வைரஸ் பரவி, நாட்டிலுள்ள ஒரு பகுதி மூடப்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே சுகாதார அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். தொடர்ந்து சுகாதார பிரிவுகளின் ஆலோசனைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது .