1000 ரூபாய் சம்பளப் பிரச்சினை – இன்றும் பேச்சு!

3 tea
3 tea

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

அதற்கு முன்னதாக இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பிரதிநிதிகள், பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றும் இன்று காலை இடம்பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.