யாழில் பொருள்கள் வாங்க அலைமோதும் மக்கள்!

60 n
60 n

யாழ்ப்பாணத்தில் பால்மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை வாங்குவதில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

குழந்தைகளுக்கான பால்மா பால்மா வகைகள், பிஸ்கட்டுகள், சீனி, மா, அரிசி உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் அதிகளவில் கொள்வனவு செய்வதாக பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் வைரஸ் அச்சநிலை ஏற்பட்ட நிலையில் அரசு, பாடசாலைகளுக்கு வரும் 5 வாரங்களுக்கு மேல் விடுமுறை வழங்கியமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் மக்கள் கூட்டமாகக் காணப்படுகின்றனர். இந்த நிலமை தெற்கிலும் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுத்து பொருள்களின் விநியோகத்தை சீர் செய்யவேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.