தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை

8ad 1
8ad 1

கொரோனா வைரஸ் காரணமாக பொதுத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.

மேலும், தேர்தலில் அமோக வெற்றி உறுதி என்பதை தெளிவாக காணக்கூடிய நிலையில் பொது தேர்தலை ஏன் ஒத்திவைக்க வேண்டும்.

அத்தோடு, தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வது சுயாதீன தோர்தல் ஆணைக்குழு மாத்திரமே.

இதை விடுத்து ஏனைய கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.