தெற்கு அதிவேக வீதியில் கஹதுடுவ மற்றும் கொட்டாவ பிரதேசங்களுக்கு இடையில் தனியார் பேருந்து ஒன்றில் இன்று காலை திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்வத்தில் எவ்வித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.