கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் செய்தி அறிக்கைகள் மற்றும் ஏனைய தடுப்பு திட்டங்களை தமிழிலும் உடனடியாக மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கடுவேவ இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பொது மக்களுக்காக வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கைகள் மொழிப்பெயர்ப்பு தாமதம் காரணமாக தமிழில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.