போரை விட கொடும் பாதிப்பு கொரோனாவால் வரலாம் !!

1 inghe 2
1 inghe 2

கொரோனா வைரஸினால் போர்க் காலத்தையும் விட பெருமளவான இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தற்போது பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான இரு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அச்சம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

அரசாங்கம் தற்போது இத்தாலி , தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்பில் செலுத்தும் கவனத்தை , சீன பிரஜைகள் மீது ஏன் செலுத்தாமல் இருக்கின்றது.

வெப்பநிலை அதிகமாக உள்ள நாடுகளில் கொரோனா தாக்கம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசெய்ன் லூன்ங் வெப்பநிலை அதிகமான பகுதிகளில் கொரோனா பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இதற்கான விஞ்ஞான கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.