தன் நன்மைக்காக ராஜபக்சக்களின் காலில் வீழ்ந்த மைத்திரி!

7 ed
7 ed

தனது எதிர்கால இருப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜபக்ஷக்களிடம் அடி பணிவது அவரது தனிப்பட்ட விருப்பமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார் .

சுதந்திர கட்சி இன்று அரசியல் நோக்கங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றும் சுதந்திர கட்சிக்கு விசுவாசமாகவே உள்ளேன். ஆனால் மைத்திரிபால சிறிசேன தலைமையில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதற்காகவே நவ லங்கா சுதந்திர முன்னணியை ஸ்தாபித்தோம்.

2015 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து புறக் கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இன்று அவரது விசுவாசிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எவரும் அன்று அவருடன் ஒன்றினையவில்லை.மஹிந்த சுழக பேரணியினை ஆரம்பித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிவிதித்தோம். அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நோக்கம் வெற்றிப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .