எரிபொருளை பதுக்கினால் அவ்வளவுதான் !

fuil
fuil

எரிபொருளை பதுக்க முயற்சிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று அறிவித்துள்ளார்.

எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்தே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

மக்கள் அநாவசியமாக அச்சப்பட வேண்டாமென்றும் நாட்டின் பாவனைக்கு தேவையானளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.