மட்டு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் பதவியேற்பு

mm
mm

மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றி வந்த திரு.நாகராஜா தனஞ்சயன் அவர்கள் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக (09.09.2019) அன்று பதவி உயர்வு பெற்றுச் சென்றதன் காரணமாக மாநகர சபையில் ஏற்பட்டிருந்த பிரதி ஆணையாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிருவாக சேவையைச் சேர்ந்த திரு உதயகுமார் சிவராஜா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளராக தனது கடமைகளை இன்று (25.09.2019) அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.