ஆறுமுகன் தொண்டமான் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

1 thondaman 2
1 thondaman 2

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றிபெறும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் அடங்கிய வேட்புமனு, இன்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.பி.ரட்னாயக்க, சட்டத்தரணி ராஜதுரை ஆகியோரும் அமைச்சருடன் பிரசன்னமாகியிருந்தனர்.

வேட்புமனு தாக்கலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தொண்டமான், “பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் நாம் அமோக வெற்றிபெறுவோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டு கூட்டணியில் இருப்பதால் நுவரெலியா மாவட்டத்திலும் வெற்றி உறுதி.

அதேவேளை, ‘கொரோனா’ வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.