கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களின் ஊடாக போலியான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே, இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த அமில துஷ்மந்த என்பவருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனவால் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று போலியான தகவலை பேஸ்புக்கில் வெளியிட்டு குறித்த நபர் குற்றமிழைத்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.