இலங்கையில் தொற்றுக்கு உள்ளாகியோர் இத்தாலியில் இருந்து வந்தவர்களே !

7 d
7 d

இலங்கையில் கொரோனா வைரஸிற்கு உள்ளாகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 பேரும் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இத்தகவலை வெளியிட்டார். இவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர் என்று அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதில் ஒருவர் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்.

ஏனைய 18 பேரும் கந்தகாடு தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் .