பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆட்சேபனை தெரிவிப்பதற்காக நண்பகல் 12 முதல் பகல் 1.30 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேட்புமனுவை கையளிக்கும்போது, ஆதரவாளர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ அழைத்துவருவதை தவிர்க்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேட்புமனுவை கையளிக்கும் நபருடன் மேலதிகமாக ஒருவர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என பொலிஸார் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.