யாழிலும் எந்நேரத்திலும் தேடுதல் ஆரம்பிக்கலாம்

5 tr
5 tr

கொரோனா பேரிடரை ஒட்டிய நடவடிக்கையாக வடக்கில் யாழ்ப்பாணத்திலும் எந்நேரத்திலும் சிறிலங்கா படையினர் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், நீர்கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கை அறிவித்துப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய சிலர் அந்தப் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய தேடுதலுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வடக்கே யாழ்ப்பாணத்தை ஒட்டிய ஒரு பிரதேசத்தில் தங்கியிருக்கின்றனர் என்ற சந்தேகம் அதிகாரிகள் தரப்புக்கு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதையொட்டி யாழ்ப்பாணத்தில் சில சமயத்தில் எந்நேரத்திலும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.