நேற்று மாலையிலிருந்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை அரசாங்கத்தினால் நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரமானது முடங்கி காணப்படுகின்றது.
யாழ்ப்பாண நகரத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதோடு வீதியால் பயணிப்போர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்தார்கள்.
எனினும் யாழ் நகர் பகுதியில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு நகரம் வெறிச்சோடிகாணப்படுகின்றது.