தெற்கு அதிவேக பாதையில் விபத்து; இரண்டு பெண்கள் உயிரிழப்பு

accident
accident

தெற்கு அதிவேக பாதையில் லாரி ஒன்றின் பின்புறம் ஜீப் ஒன்று மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் மூன்று பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில், ஜீப்பில் நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

ஜீப்பின் சாரதி மற்றும் காயமடைந்த பெண் ஆகியோர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குப் பின்னர் மேலும் மூன்று பெண்கள் பந்தரகம மற்றும் ஹொரானா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.