அன்னம் சின்னத்தில் களமிறங்கும் சஜித்

.jpg
.jpg

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அன்னம் சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று கூடிய செயற்குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்தில் களமிறங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.