கொரோனா தொற்றுநோய் தொடர்பான 24 மணி நேர உதவி அழைப்பெண்

3 4es
3 4es

வடமாகாணத்தில் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்கு தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் பெற்றுக் கொள்ள வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் செயற்படும் வண்ணம் உதவி அழைப்பெண் சேவையானது இன்று (2020.03.30) முதல் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

021-2217982 அல்லது 021-2226666 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை மேற்கொள்வதனூடாக பொதுமக்கள் இந்த சேவையினை பெற்றுக்  கொள்ள முடியும்.

வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடமாகாணம்

2020.03.30