“ஊரடங்கு” முக்கிய அறிவித்தல்!

1 Time 2 1
1 Time 2 1

கொழும்பு, கம்பாஹா, புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளதோடு எவரும் இந்த கிராமங்களுக்கு நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.