3,000 விவசாயிகளுக்கு காப்புறுதி இழப்பீட்டுத் தொகை

herisan
herisan

விவசாய காப்புறுதி சபையில் பதிவுசெய்து காப்புறுதி தவணைப்பணத்தை செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை 2 வாரத்திற்குள் செலுத்தப்படும் என்று விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விவசாய காப்புறுதி சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அம்பாறை, மொனராகலை மற்றும் அத்திமலை பிரதேசங்களுக்கான காப்புறுதி தவணைக் கொடுப்பனவை செலுத்திய 3,000 விவசாயிகளுக்கு உற்பத்தி பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.