கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நடமாடும் மருந்துகள் விநியோக சேவையை வழங்குவதற்கு ஆயிரம் மருந்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 3 ஆயிரம் மருந்தகங்களிலிருந்து இந்த ஆயிரம் மருந்தகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும், தங்களால் நடமாடும் சேவையை வழங்க முடியும் என்றால் ஏனைய மருந்தகங்களும் சுகாதார அமைச்சின் அனுமதியைப் பெற்று இந்தச் சேவையை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள ஆயிரம் மருந்தகங்களின் பெயர்ப்பட்டியல் அந்தந்தப் பொலிஸ் மற்றும் பிரதேச செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பிரசன்ன மேலும் கூறினார்.
மருந்து தேவைப்படும் மக்கள் அவர்களது பிரதேசத்தில் உள்ள இவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட மருந்தகங்களைத் தொடர்பு கொண்டு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மருந்துகளை விநியோகிப்பதற்கு ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்று பிரசன்ன குணசேன மேலும் கூறியுள்ளார்.