இலங்கைக்கு ஜப்பானிலிருந்து நேற்று வந்த கொரோனா ஒழிப்பு மருந்து பற்றிய விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
அவிகன் என்கிற குறித்த மருந்தைக் கொண்டு கொரோனா வைரஸை குணப்படுத்த முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
நேற்றையதினம் ஜப்பானிலிருந்து 5000 அவிகன் குளுசைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் அவிகன் குளுசைகள் ஜப்பானில் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அது அந்நாட்டு மருந்தகத் துறையில் பதிவுசெய்யப்படவில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளமை குறிப்பிட்த்தக்கது.