பாணந்துறை பகுதியில் மதுபானத்துடன் ஒருவர் கைது!

4 ere
4 ere

பாணந்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட திக்பெத்த, பதலகொட்டுவ பகுதியில், பெருந்தொகை சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா 18 இலட்ஞம் மில்லிலீற்றரும், சட்டவிரோத மதுபானம் 37 ஆயிரத்து 500 மில்லிலீற்றரும் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, திக்பெத்த பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.