மஸ்கெலியா பகுதியில் ஒருவர் கைது!

4 ere
4 ere

மஸ்கெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தபோது உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்துகொண்டிருந்த ஒருவரை நேற்று (2) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி எச். யசரத்ன பண்டாரா கூறுகையில்.

மஸ்கெலியாவில் உள்ள டிசைட் தேயிலைத் தோட்டத்தின் மேல் பிரிவில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.