இதுவரை 174 பேருக்குத் தொற்று!!

2 wsd 2
2 wsd 2

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்தநிலையில், இன்று புதிதாக 8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 இலிருந்து 174 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதையடுத்து கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 140 நோயாளிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது 259 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.