மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

1838626370Elec
1838626370Elec

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்ர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆலயத்தில் இந்து இளைஞர்கள் சிலர் இணைந்து பங்குனித் திங்களை முன்னிட்டு ஆலயத்தை கழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆலயத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக பணியில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

இவரை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இதில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய சண்முகராஜ் செந்தூரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.