பொலிஸ் மீது சிறுவன் தாக்குதல்!

download 2 1
download 2 1

ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பணிக்கு இடையூறு விளைவித்து, அவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததோடு, அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய, நேற்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் ரம்புக்கணை பொலிஸ் பிரிவிலுள்ள ஹீனாபோவ பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் கடிகமுவவில் வசிக்கும் 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள்ளார்.