ஊரடங்கு உத்தரவை மீறிய 13,468 பேர் கைது

66 d
66 d

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்ட உத்தரவை மீறிய ஆயிரத்து 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கைதானவர்களிடமிருந்து 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களில் மொத்தமாக 13 ஆயிரத்து 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 3 ஆயிரத்து 353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.