மட்டக்களப்பில் வேட்டைக்குச் சென்ற சிறுவன் துப்பாக்கி வெடித்து பலி!

gun
gun

மட்டக்களப்பு மாவட்டம் கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளாதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிக்காந்தன் தனுஜன் என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட 4 பேர் உள்ளுர் தயாரிப்பு கட்டுத்துவக்குடன் நேற்று மாலையில் காட்டில் வேட்டைக்கு சென்றுள்ளனர் இந்த நிலையில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்ததுள்ளார்

இதனையடுத்து சிறுவனை கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இடையில் உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் தொடர்பாக வேட்டைக்கு சிறுவனுடன் சென்ற குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 22, 20, 14 , வயதுடைய 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்

ஊயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் .இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.