சுதந்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

bombb
bombb

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் நேற்று சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிப்பொருட்கள் கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட தொகுதி வெடிபொருட்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளரால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த இடத்தில் அடையாளம் காணப்பட்ட 8 கிளைமோர் குண்டுகளையும் 60 ரிக்னெட்டர்களையும் இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.