யாழில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா இல்லை

download 5 3
download 5 3

யாழ்ப்பாணத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இன்று காலை தெரிவித்தார்.

“யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 8 பேருக்கும் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கும் நேற்றுப் பகல் ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் எவருக்கும்  கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, யாழ்ப்பாணத்தில் இதுவரை 7 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் வைத்தியர் சத்தியமூர்த்தி மேலும் கூறினார்.