ஊரடங்கை மீறிக் கைதானோர் எண்ணிக்கை 16,124ஆக உயர்வு

8 s 1
8 s 1

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 16 ஆயிரத்து 124 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 ஆயிரத்து 64 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்குச் சட்டம், கடந்த 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அன்று தொடக்கம் இதுவரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய, இன்று (07) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான கடந்த 06 மணித்தியால காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இக்காலப்பகுதியில் 73 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.