கொழும்பிலிருந்து சொந்த ஊருக்கு சென்று இளைஞன் திடீர் மரணம்!

unnamed
unnamed

இலங்கையின் தலை நகரான கொழும்பில் தொழில் புரிந்து வந்த இளைஞர் ஒருவர் எம்பிலிப்பிட்டியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணித்துள்ளார்.

நேற்று (7) இரவு எம்பிலிப்ட்டிய மித்தெனிய காரியமடித்த, தலாவ வைத்தியசாலையில் இந்த நபர் மரணித்துள்ளார்.

குறித்த நபர் குடாகொட, உடகஹாவத்தை பிரதேசத்தை சேர்ந்த விக்ரமராச்சி கங்கானம்கே வஜிர பிரசங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞன் கொழும்பில் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணாக கொழும்பில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இளைஞனுக்கு நேற்றிரவு 10 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மரணம் தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிதெரிவிக்கப்பட்டுள்ளது.