கொரோனா தொற்றிலிருந்து மீண்ட இருவர்!

.jpg
.jpg

கொரோனா தொற்று காரணமாக இருவர் இலங்கையில் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 48 வயதுடைய நபர் ஒருவர் இன்று (8) உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோர் தொகை 7 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 139 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேகத்தில் 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார் இருவர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.