வவுனியா – இலுப்பைக்குளம் பகுதியில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று தனது வீட்டு முற்றத்தில் நின்றிருந்த சமயம் மின்னலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் உடனடியாக மருத்துவ அவசர ஊர்தியின் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ள நபர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
குறித்த மின்னல் தாக்கம் காரணமாக சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் பாடசாலை கட்டிடமும் சேதமடைந்துள்ளமை தெரிவிக்கப்பட்டுள்ளது.