யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்தியா- திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
மேலும் வீரபுத்திரன் மணி (வயது 36) என்ற குடும்பத் தலைவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் இணுவில் பகுதியில் தங்கி இருந்துள்ளார். அவருக்கு தலையில் கட்டி என தெரிவித்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.